மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜோசப் பொன்னையா அவர்கள் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டதன் 16ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு கடந்த 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை புளியந்தீவு புனித அந்தோனியார் திருத்தலத்தில் நடைபெற்றது.

திருத்தல பரிபாலகர் அருட்தந்தை நீக்லஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜீவராஜ் அவர்களின் தலைமையில் நன்றித்திருப்பலியும் தொடர்ந்து ஆயருக்கான கௌரவிப்புக்களும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், இறைமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin