யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் சாவகச்சேரி பங்கில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி மாணவர்களுக்கான பாசறையும் மறையாசிரியர்களுக்கான கருத்தமர்வும் கடந்த 18ஆம் திகதி சனிக்கிழமை சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலயத்தில் நடைபெற்றது.

சாவசக்சேரி பங்குத்தந்தை அருட்தந்தை ஞானறூபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் வழிநடத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கருத்துரைகள், குழுச்செயற்பாடுகள், விளையாட்டுக்கள் என்பன இடம்பெற்றன.

இந்நிகழ்வில் 110 வரையான மாணவர்களும் 24 வரையான ஆசிரியர்களும் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin