அச்சுவேலி பங்கின் நவக்கிரி புனித றீற்றம்மாள் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை மைக்கல் சவுந்தரநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 22ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது.

19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 21ஆம் திகதி நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை பருத்தித்துறை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை பெனற் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை செபமாலைதாசர் சபை அருட்தந்தை அலன் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

20ஆம் திகதி திங்கட்கிழமை ஆலய பீடத்திற்கென அமைக்கப்பட்ட புதிய பலிப்பீடமும் வாசக மேடையும் பங்குத்தந்தை அவர்களினால் ஆசீர்வதிக்கப்பட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin