விசுவமடு புனித இராயப்பர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட மரியாயின் சேனை பிரசீடிய அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து “விசுவமடு வியாகுல அன்னை பிரசீடியம்” என்னும் பெயரில் புதிய மரியாயின் சேனை பிரசீடியமும் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

திருப்பலியை முல்லைத்தீவு மறைக்கோட்ட மரியாயின் சேனை ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை யூட் அமலதாஸ் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்ததுடன் முல்லைத்தீவு மறைக்கோட்ட மரியாயின் சேனை கியூரியா தலைவர் மற்றும் செயளாலர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

By admin