உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை போல் அனக்கிளிற் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 13ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.

4ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை சகாயநாயகம் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

திருவிழா திருப்பலி நிறைவில் ஆயர் அவர்களுக்கான கௌரவிப்பு இடம்பெற்றதுடன் அன்றைய தினம் மாலை புனித பற்றிமா இளையோர் ஒன்றியத்தினரின் தயாரிப்பில் உருவான ‘எங்கள் பற்றிமா’ காணொளி பாடல் இறுவட்டு வெளியீட்டு நிகழ்வும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ரமேஸ் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து இறுவட்டினை வெளியிட்டு வைத்து முதற்பிரதியை பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்குமக்கள், அயல் ஆலயமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

By admin