இரணைப்பாலை புனித பற்றிமா அன்னை ஆலயம் கட்டப்பட்டதன் 50ஆம் ஆண்டு நிறைவை சிறப்பித்து புதிதாக அமைக்கப்பட்ட தேரில் அன்னையின் திருச்சுருபத்தை கொலுவேற்றி முன்னெடுக்கப்பட்ட தேர்ப்பவனி கடந்த 06ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை டெனிசியஸ் அவர்களின் ஒழுங்குப்படுத்தலில் ஆலய வருடாந்த நவநாட்களின் ஆரம்பமாக இடம்பெற்ற இந்நிகழ்வில் முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்கள் கலந்து 18 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட அன்னையின் புதிய தேரை ஆசீர்வதித்தார்.

தொடர்ந்து அன்னையின் தேர்ப்பவனி நடைபெற்றதுடன் இந்நிகழ்வில் பங்குமக்கள் பக்தியுடன் பங்குபற்றினர்.

By admin