இலங்கை தேசிய அன்பிய ஆணைக்குழு உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு கடந்த 08ஆம், 09ஆம் திகதிகளில் திருகோணமலை மறைமாவட்டத்தில் நடைபெற்றது.

தேசிய இயக்குநர் அருட்தந்தை பிரிய ஜெயமான அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆணைக்குழுவுக்கு பொறுப்பான ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் அவர்களின் தலைமையில் திருகோணமலை தீபம் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் அன்பிய தரிசிப்பு, சிறப்பு திருப்பலி, ஒன்றுகூடல் என்பன நடைபெற்றதுடன் மறைமாவட்ட அன்பிய செயற்பாடுகளின் அறிக்கைகள் வாசிக்கப்பட்டு எதிர்கால செயற்திட்டங்கள் மற்றும் தேசிய அன்பிய ஞாயிறு தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இந்நிகழ்வில் மறைமாவட்ட அன்பிய இயக்குநர்கள், பிரதிநிகளென 60 வரையானவர்கள் கலந்து கொண்டதுடன் யாழ். மறைமாவட்டதிலிருந்து மறைமாவட்ட அன்பிய இயக்குநர் அருட்தந்தை ஜோய் மரியரட்ணம் அவர்களுடன் இணைந்து நான்கு பிரதிநிதிகள் பங்குபற்றியிருந்தனர்.

 

 

By admin