குருநகர் ஜேம்ஸ் வோரியர்ஸ் இளையோர் சமூக முன்னேற்ற கழகத்தின் 10ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் கடந்த 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கழக தலைவர் திரு. இயல் றொன்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் குருநகர் பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்ததுடன் 100 வரையான குருதிக்கொடையாளர்கள் கலந்து இரத்ததானம் வழங்கியிருந்தார்கள்.

By admin