வவுனியா மறைக்கோட்ட பங்குகளின் திருப்பாலர் சபை சிறார்கள் மற்றும் ஊக்குவிப்பாளர்களுக்கான ஒன்றுகூடல் கடந்த 04ஆம் திகதி சனிக்கிழமை இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது.

மன்னார் மறைமாவட்ட பாப்பிறைகளின் சபை இயக்குநர் அருட்தந்தை தயாளன் கூஞ்ஞ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து கலை நிகழ்வுகள், குழு விளையாட்டுக்கள், விழிப்புணர்வு குறும்படம் கட்சி என்பன இடம்பெற்றன.

மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் வவுனியா மறைக்கோட்ட முதல்வர், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் திருப்பாலத்துவ சபை சிறார்கள் ஊக்குவிப்பாளர்களென 400 வரையானவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

By admin