மன்னார் மறைமாவட்டத்தில் நான்கு புதிய குருக்களுக்கான திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு கடந்த 09ஆம் திகதி வியாழக்கிழமை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் நடைபெற்றது.

மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு திருப்பிலியில் மன்னார் மறைமாவட்டத்தை சேர்ந்த திருத்தொண்டர்களான சிம்ஸன் குருஸ், யதுஸ்ராஜ், விமல் றோய் மற்றும் அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த திருத்தொண்டர் யூலியஸ் ஜெசிங்டன் லோகு ஆகியோரே புதிய குருக்களாக திருநிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

புதிய குருக்களாக திருநிலைப்படுத்தப்பட்ட இவர்கள் அர்ப்பணிப்புடன் பணிவாழ்வில் நிலைத்திருந்து இறை பணியாற்ற நல்வாழ்த்துக்களை தெரிவித்து நிற்கின்றோம்.

By admin