நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 29ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.

20ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவன இயக்குநர் அருட்தந்தை இயூயின் பிரான்சிஸ் அவர்களும் நற்கருணை விழா திருப்பலியை அருட்தந்தை கஜீஸ்காந்த் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

திருவிழா திருப்பலி நிறைவில் கடந்த காலங்களில் பங்குமட்ட ரீதியாக நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான கௌரவிப்புக்களும் ஆலய புதிய முகப்பிற்பான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் இடம்பெற்றன.

 

By admin