அக்கராயன் பங்கு மாணவர்களுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அமலமரித் தியாகிகள் சபை அருட்தந்தை சேகர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 29ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.

யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் அக்கராயன்குளம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் நடைபெற்ற திருப்பலியில் 46 மாணவர்கள் உறுதிப்பூசுதல் அருட்சாதனத்தைப் பெற்றுக்கொண்டார்கள்.

By admin