சக்கோட்டை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை யோதிநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 13ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது.
04ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை தீவக மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை றெக்னோ அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட இறைதியான இல்ல இயக்குநர் அருட்தந்தை இருதயதாஸ் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

By admin