நாடகக்கலையின் செயல் முறை தேர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் யாழ். திருமறைக் கலாமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நாடகப் பயிலக கற்கை நெறியின் 2024 ஆம் ஆண்டுக்கான புதிய பிரிவு ஆரம்பமாகவுள்ளது.

நாடகக் கலையில் ஆர்வம் உள்ளவர்களும், நாடகமும் அரங்கியலும் பாடத்தை தரம் 11,12,13 இல் பயிலும் மாணவர்களும் இக்கற்கை நெறியில் இணைந்து கொள்ள முடியுமெனவும் ஆறு மாத காலத்தைக்கொண்ட இக்கற்கைநெறிக்கான வகுப்புக்கள் சனி, ஞாயிறு தினங்களில் இடம்பெறுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 30 வருடங்களாக நாடக அரங்கியலுக்கான சான்றிதழ் கற்கை நெறியை நடத்திவரும் இந்நிறுவனம் இக்கற்கை நெறியூடாக ஏராளமான கலைஞர்களை உருவாக்கியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin