செம்பியன்பற்று றோ.க.த.க பாடசாலையில் ஆரம்ப பிரிவு மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் கால்கோள் விழா கடந்த 22ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.

பாடசாலை முதல்வர் திரு. பகீரதகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புதியமாணவர்களுக்கான வரவேற்பும் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

தாளையடி பங்குத்தந்தை அருட்தந்தை டியூக்வின்சன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டதுடன் பெற்றோர்கள், பழையமாணவர்கள், நலன்விரும்பிகளென பலரும் இணைந்து இந்நிகழ்வை சிறப்பித்தனர்.

By admin