யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் பழைய மாணவர்கள் இணைந்து முன்னெடுத்த அதிபர் வெற்றிக் கிண்ணத்துக்கான T10 துடுப்பாட்ட தொடர் 23, 24ஆம் திகதிகளில் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இப்போட்டிகளில் கல்லூரியின் பழைய மாணவர்கள் 4 அணிகளாக பிரிந்து பங்குபற்றினார்கள்.

24ஆம் திகதி இன்றைய தினம் நடைபெற்ற இத்தொடரின் இறுதிப்போட்டியில் செஞ்சிலுவைச்சங்க முன்னாள் தொடர்பாடல் அதிகாரி திரு. மோகன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் முன்னாள் கப்பல் கட்டுப்பாட்டு அதிகாரி திரு. ரட்ணராஜ் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் Victoria International நிறுவன உரிமையாளர் திரு. ஞானேந்திரன் மற்றும் Lilly Sports நிறுவன உரிமையாளர் திரு. எட்வின் குணரட்ணம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்தனர்.

By admin