பல்லவராயன்கட்டு டொன் பொஸ்கோ தொழிற்பயிற்சி நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் தொழிற்பயிற்சி கற்கைநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
பெப்ரவரி மாதம் 05ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கணினி, தகவல் தொடர்பாடல் தொழினுட்பவியல், தையல், மின்னியல், ஆங்கிலம், ஆரி வேர்க் மற்றும் கேக் ஜசிங் போன்ற இக்கற்கைநெறிகளுக்கு கா.பொ.த உயர்தரத்தை பூர்த்திசெய்த மாணவர்களும் ஏனையவர்களும் விண்ணப்பிக்க முடியுமெனவும் தூர இடங்களிலிருந்து கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கான தங்குமிட வசதிகள் ஒழுங்குபடுத்திக்கொடுக்கப்படும் எனவும் நிறுவன அதிபர் அருட்தந்தை நதீப் அவர்கள் தெரிவித்துள்ளார்.

By admin