ஊர்காவற்றுறை பங்கில் மரியாயின் சேனை ஆரம்பிக்கப்பட்டதன் 20வது ஆண்டு நிறைவு நிகழ்வு கடந்த 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஊர்காவற்துறை புனித பரலோக அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயறஞ்சன் அவர்களின் வழிகாட்டலில் மரியாயின் சேனை தலைவி யேசுதாஸ் அனாலிக்ஸ் வினிபிறீடா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நன்றி திருப்பலியும் தொடர்ந்து மரியாயின் சேனை அங்கத்தவர்களுக்கான ஒன்றுகூடலும் இடம்பெற்றன.

By admin