தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு பல்லவராயன்கட்டு டொன் பொஸ்கோ ஆங்கிலப் பாடசாலையும், தொழில்நுட்பக் கல்லூரியும் இணைந்து முன்னெடுத்த சிறப்பு நிகழ்வு கடந்த 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை டொன் பொஸ்கோ பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.
அருட்தந்தையர்கள் மெல்வின் றோய் மற்றும் நதீப் ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.

By admin