யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மறைமாவட்டங்களின் ஆயர்களும், குருமுதல்வர்களும் அடங்கிய வடக்கு கிழக்கு ஆயர் மன்றக் கூட்டம் 17ஆம் திகதி கடந்த புதன்கிழமை வவுனியா திருக்குடும்ப கன்னியர் மடத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ் மறைமாவட்டங்களை இணைத்து முன்னெடுக்கக்கூடிய செயற்பாடுகள் பற்றி ஆராயப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இதன் அடிப்படையில் நான்கு மறைமாவட்டங்களிலும் பணியாற்றும் மறைமாவட்ட மற்றும் துறவற குருக்களுக்கான தவக்கால தியான ஒன்றுகூடல், மறையாசிரியர்களுக்கான வதிவிட பயிற்சி நெறி, ஆகியவற்றை ஏற்பாடு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன் அமைதி ஆய்வு மையம் நிறுவுதல், விவிலியத்தை அச்சிட்டு வெளியிடுதல், தமிழ் கரையோரப்பகுதி மீனவர்கள் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டன.

By admin