யாழ். மறைமாவட்ட புனித ஜோசப்வாஸ் இறையியல் கல்லூரியின் புதிய கல்வியாண்டு ஆரம்பநிகழ்வு 20ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி அதிபர் அருட்தந்தை றவிறாஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் கலந்து திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
தொடர்ந்து கற்கைநெறியின் டிப்ளோமா பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் புதிய கல்வியாண்டிற்கான ஆரம்ப விரிவுரையும் இடம்பெற்றது.
ஆரம்ப விரிவுரையை அருட்தந்தை யஸ்ரின் அவர்கள் “நற்செய்திப்பணியில் பண்பாட்டு கலாச்சார விழுமியங்களின் இணைப்பில் வெற்றிகண்ட புனித ஜோசவ்வாஸ்” என்னும் தலைப்பில் நிகழ்த்தினார்.

By admin