யாழ். கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரி நான்காம் வருட இறையியல் மாணவர்களால் முல்லைத்தீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி கள அனுபவ சிறப்பு நிகழ்வு 7ஆம் திகதி தொடக்கம் 14ஆம் திகதி வரை நடைபெற்றது.
யாழ் மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குனர் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் முல்லைத்தீவு பங்குதந்தை அருட்தந்தை அகஸ்ரின் அவர்களின் தலைமையில் நடைபெற்றஇந்நிகழ்வில், மறைக்கல்வி மாணவர்களுக்கான கருத்துரைகள், குழு விளையாட்டுக்கள், கலைநிகழ்வுகள் இடம்பெற்றன.
நான்காம் வருட இறையியல் மாணவர்களின் மறைக்கல்வி கள அனுபவப் பயிற்சியாக அமையப்பெற்ற இந்நிகழ்வு முல்லைத்தீவு பங்கிலுள்ள நான்கு ஆலயங்களில் நடைபெற்றதுடன் 150ற்கும் அதிகமான மறைக்கல்வி மாணவர்களும் 33 வரையான மறையாசியர்களும் இதில் கலந்து பயனடைந்தனர்.

By admin