குளமங்கால் பங்கு புனித சவேரியார் ஆலய இளையோர் ஒன்றியத்தினரின் ஒழுங்குபடுத்தலில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 14ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில் இளையோர் நோயாளர்களைப் பார்வையிட்டதுடன் சிறப்பாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், மற்றும் உளத்தாக்கங்களினால் ஆற்றுப்படுத்தப்படுபவர்களை சந்தித்து பங்கு மக்களினால் சேகரிக்கப்பட்ட கிறிஸ்மஸ் அன்பளிப்புக்களையும் வழங்கினார்கள்.

By admin