மிருசுவில் திருக்குடும்ப கன்னியர் மடத்தில் பணியாற்றிவந்த அருட்சகோதரி மேரி றோசி அவர்கள் பணிமாற்றலாகி செல்லும் நிலையில் அவருக்கான பிரியாவிடை நிகழ்வு கச்சாய் புனித இராயப்பர் ஆலயத்தில் கடந்த 18ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை லோறன்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நன்றித் திருப்பலியும் தொடர்ந்து அருட்சகோதரிக்கான கௌரவிப்பும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் செபமாலை தாசர் சபை மாகாண முதல்வர் அருட்தந்தை ஜெயசீலன் அவர்களும்; மிருசுவில் திருக்குடும்ப கன்னியர்மட தலைவி அருட்சகோதரி நெவிஸ் அவர்களும் ஆலய அருட்பணி சபை உறுப்பினர்கள் மற்றும் பங்கு மக்களென பலரும் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்.

By admin