ஊர்காவற்துறை பங்கு புனித யோசப்வாஸ் இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட புனித யோசப்வாஸ் திருவிழா 16ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை ஊர்காவற்துறை புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயறஞ்சன் அவர்களின் தலைமையில் ஒன்றியத் தலைவர் செல்வன் றமில்டன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து இளையோருக்கான ஒன்றுகூடலும் இடம்பெற்றன.
ஊர்காவற்துறை திருக்குடும்ப கன்னியர் மட முதல்வி அருட்சகோதரி தயாநாயகி செபமாலை மற்றும் ஊர்காவற்துறை புனித மரியாள் றோ.க மகளிர் வித்தியாலய அதிபர் அருட்சகோதரி நிர்மலறஞ்சினி பாலசிங்கம் ஆகியோர் கலந்து இந்நிகழ்வைசிறப்பித்தனர்.

By admin