தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 15ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.
ஆலய இளையோர் ஒன்றியத்தினரின் ஒழுங்குபடுத்தலில் பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் காலை சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து மாலை விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் யாழ். மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இயக்குநர் அருட்தந்தை யாவிஸ் மற்றும் யாழ். புனித மரியாள் வித்தியாலய அதிபர் திரு. கெனத் மரியன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

By admin