அமல மரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை வின்சன் பற்றிக் அவர்களின் அன்பின் உட்குரல் மற்றும் உறவின் இராகங்கள் ஆகிய நூல்களின் வெளியீட்டு நிகழ்வு 11ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். பற்றிக்ஸ் வீதியில் அமைந்துள்ள அகவொளி குடும்பநல நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவன இயக்குநர் அருட்தந்தை இயூயின் பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மாவட்ட ஆளுநர் திருமதி சாள்ஸ் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து நூல்களை வெளியிட்டு வைக்க முதல் பிரதிகளை நாவாந்துறை அன்னை கடல் உணவு வாணிப உரிமையாளர் திரு. அமலதாஸ் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
ஹென்றி ஜே. எம். நொவென் அவர்களின் The inner voice of love எனும் ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்பாக “அன்பின் உட்குரல்” நூலும் உறவின் இராகங்கள் நூல் அருட்தந்தையினால் ஏற்கனவே வெளியீடு செய்யப்பட்ட நூலின் மூன்றாவது பதிப்பாகவும் அமைந்துள்ளது.

By admin