ஊர்காவற்துறை பங்கு இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட கரோல் தனிப்பாடல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு 01ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது.
ஒன்றிய தலைவர் செல்வன் றமில்டன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பங்குதந்தை அருட்தந்தை ஜெயறஞ்சன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் ஊர்காவற்துறை திருக்குடும்ப கன்னியர் மட முதல்வி அருட்சகோதரி தயாநாயகி செபமாலை மற்றும் ஊர்காவற்துறை புனித மரியாள் றோ.க மகளிர் வித்தியாலய அதிபர் அருட்சகோதரி நிர்மலறஞ்சினி பாலசிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்தனர்.

By admin