மன்னார் மாவட்டத்தில் பணியாற்றும் அரச மற்றும் அரச சார்பற்ற திணைக்களத் தலைவர்களுக்கான ஒன்றுகூடல் 04ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை மன்னார் புனித செபஸ்தியார் பேராலய வளாகத்தில் நடைபெற்றது.
பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை அகஸ்ரின் புஸ்பராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கனகேஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை கிறிஸ்துநாயகம், அருட்தந்தையர்கள், திணைக்கள அதிகாரிகள், வங்கி முகாமையாளர்கள், பேராலய பணிக்குழு பணியாளர்களென பலரும் கலந்து கொண்டனர்.

By admin