தர்மபுரம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா 30ஆம் திகதி சனிக்கிழமை தர்மபுரம் புனித சவேரியார் ஆலயத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.

அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை வின்சன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் தர்மபுரம் இறைஊழியர் சபை முதல்வி அருட்சகோதரி தெரசித்தா அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் தர்மபுரம் பிரதேச வைத்தியசாலை வைத்திய அதிகாரி திரு. டிலுக மற்றும் தர்மபுரம் கிழக்கு கிராம சேவையாளர் குணாளினி ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து இந்நிகழ்வை சிறப்பித்தனர்.

 

By admin