அன்னை மரியாவின் துணையோடு செபம் எனும் வல்லமையான ஆயுதத்தை தாங்கி புதிய வருடத்தை ஆரம்பிப்போம் என புதுவருட வாழ்த்துச்செய்தியில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிகாசம் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் தனது செய்தியில் 2023ஆம் ஆண்டு இன்ப துன்பமான பல அனுபவங்களை தந்து எம்மை விட்டுக் கடந்து சென்று விட மலர்ந்திருக்கும் 2024ஆம் புதிய ஆண்டை இறைவனின் தாயாம் தேவ அன்னையிடம் ஒப்படைத்து நம்பிக்கையோடு தொடங்குவேமென தெரிவித்ததுடன் 2024ஆம் ஆண்டை இறைவேண்டல் ஆண்டாக உலகம் முழுவதிலும் கடைப்பிடித்து இறைவேண்டுதலில் முழுமையாக ஈடுபடும்படி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில் செபம் எனும் பலமான ஆயுதத்தை எமது கைகளில் ஏந்தி மலர்ந்திருக்கும் இப்புதிய ஆண்டில்அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண முயல்வோமென மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

By admin