யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா 28ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை ஊடக மையத்தில் அமைந்துள்ள ஆயர் தியோகுப்பிள்ளை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
ஊடக மைய இயக்குநர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலை நிகழ்வுகளும் கிறிஸ்து பிறப்பு தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட தனிப்பாடல் மற்றும் பாலன்குடில் போட்டிகளில் வெற்றிபெற்றவர்கள் மற்றும் பங்குபற்றியவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் பிரதம விருந்தினராகவும் யாழ்ப்பாணம் புனித மாட்டீனார் சிறிய குருமட உருவாக்குநர் அருட்தந்தை றெஜி இராஜேஸ்வரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் அவுஸ்திரேலியா நாட்டில் பணியாற்றும் பொது வைத்திய நிபுணர் திரு.பிரதீபன் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர்.

By admin