யாழ். பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புகள் பீட கிறிஸ்தவக் கற்கைகளில் முதுமாணிப் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கற்கைநெறி இணைப்பாளர் அருட்தந்தை போல் றொகான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அருளுரைகள், கரோல் கீதங்கள் இடம்பெற்றதுடன் அன்பளிப்புக்களும் பரிமாறப்பட்டன.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயர்பட்டப் படிப்புகள் பீடாதிபதி பேராசிரியர் கண்ணதாசன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலசுந்தரம்பிள்ளை, உயர்பட்டப் படிப்புகள் பீட உதவிப் பதிவாளர், கற்கைநெறியின் விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்களென பலரும் கலந்து கொண்டனர்.

By admin