ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட ஒளி விழா 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் அருட்தந்தை அன்ரன் அமலதாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலை நிகழ்வுகளும் மாணவர்களுக்கான பரிசளிப்பும் நடைபெற்றன.
சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல பரிபாலகர் அருட்தந்தை ஜெகன்குமார் அவர்கள் பிரதம விருந்தினராகவும் ஆசிரியர் வாண்மை விருத்தி நிலைய முகாமையாளர் திரு மனுவேற்பிள்ளை அலஸ்ரின் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து இந்நிகழ்வை சிறப்பித்தனர்.
 

By admin