ஊர்காவற்துறை பங்கில் முன்னெடுக்கப்பட்ட ஒளி விழா கடந்த 27 ஆம் திகதி கடந்த புதன்கிழமை புனித மரியாள் றோ.க மகளீர் வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.
பங்குதந்தை அருட்தந்தை ஜெயறஞ்சன் அவர்களின் தலைமையில் மறையாசிரியர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் க.பொ.த சாதாரண தர மற்றும் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் மற்றும் ஒளிவிழா போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவன இயக்குநர் அருட்தந்தை யூஜின் பிரான்சிஸ் அவர்கள் பிரதம விருந்தினராகவும் ஊர்காவற்துறை திருக்குடும்ப கன்னியர் மட முதல்வி அருட்சகோதரி தயாநாயகி செபமாலை அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் அருட்சகோதரிகள் பங்கு மக்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin