முல்லைத்தீவு மாவட்டத்தில் சுயதொழில் மேற்கொள்ளும் சிறந்த பண்ணையாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு 13ஆம் திகதி கடந்த புதன்கிழமை முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்டத்திற்கு சொந்தமான அளம்பில் சுவாமி தோட்ட பகுதியில் பெருமளவிலான நிலப்பரப்பில் மரக்கறி பயிர்ச்செய்கை மேற்கொண்டுவரும் முல்லைத்தீவு சிலாவத்தை பிரதேசத்தை சேர்ந்த திரு. ஆபிரகாம் வேதநாயகம் அவர்கள் சிறந்த கோழி வளர்ப்பாளருக்கான விருதை பெற்றுள்ளார்.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வடமாகாண விவசாய அமைச்சின் செயலர் ஜெகூ, வடமாகாண விவசாயப் பணிப்பாளர் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் சுவாமி தோட்டத்திற்கு கள விஜயம் மேற்கொண்டு திரு. வேதநாயகம் அவர்களை உற்சாகப்படுத்தியதோடு யாழ். திருஅவையின் முயற்சிகளையும் பாராட்டினர்.

By admin