கிராஞ்சி பொன்னாவெளி பகுதியில் அமைய இருக்கும் சீமெந்து தொழிற்சாலை மற்றும் சுண்ணங்கல் அகழ்வுக்கு எதிராக அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் 15ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை இப்பிரதேசத்தில் அனுமதி இன்றி சுண்ணக்கல் அகழ்வுபணி ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து அப்பிரதேச மக்கள் அதனையறிந்து முற்றுகை பேராட்டத்தினை மேற்கொண்டனர்.
இதனை தொடர்ந்து அப்பகுதிக்கு வருகை தந்த கனிமவள அதிகாரி திரு. மயூரன் அவர்கள் முறையான அனுமதியை பெற்று மக்களுக்கு அது தொடர்பான விளக்கம் வழங்கப்பட்ட பின்னரே சுண்ணங்கல் அகழ்வு மேற்கொள்ளப்படுமென உத்தரவாதம் வழங்கி பணிகளை நிறுத்தியதற்கமைவாக மக்களின் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin