கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவக்கல்லூரி அன்னை திரேசா சமூகப்பணி மன்றத்தினால் கோப்பாய் அன்னை தெரேசா அமைதி இல்லத்தில் முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்து பிறப்பு நற்செய்தி பகிர்வு நிகழ்வு 15ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அருட்தந்தை குயின்சன் அவர்களின் வழிகாட்டலில் அன்னை தெரேசா அன்புக் கன்னியர் அமைதி இல்லத்தில் பராமரிக்கப்பட்டுவரும் முதியோர்களுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் அருட்சகோதரர்களினால் நாடகம் ஆற்றுகை செய்யப்பட்டு கரோல் பாடல்கள் இசைக்கப்பட்டு சுவையான சிற்றுண்டிகள் மற்றும் ‘சவேரியார் பணிஸ்’ என்பனவும் பரிமாறப்பட்டன.

By admin