காலி மறைமாவட்டத்தின் புதிய குருமுதல்வராக அருட்தந்தை மைக்கல் ராஜேந்திரம் அவர்கள் காலி மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை றேமண்ட் கிங்சிலி விக்ரமசிங்க அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அருட்தந்தை அவர்கள் மறைமாவட்டத்தின் பல பங்குகளிலும் பணியாற்றியதுடன் இனம் மதம் மொழி கடந்து கல்வி, கலாசார, சமூக, பொருளாதார முன்னேற்றங்களில் தன்னை ஈடுபடுத்திய சமூக பற்றாளரும் தெனியாய பிரதேசத்தில் அமைந்துள்ள கொடெசெப் எனும் தொண்டு நிறுவனத்தின் நிறுவனருமாவார்.
தற்போது காலி மாவட்டத்தின் உடுகம புனித செபஸ்தியார் ஆலயத்தின் பங்கு தந்தையாகவும், தேசிய வின்சன் டி போல் சபையின் ஆன்மீக இயக்குனராகவும் மற்றும் தேசிய பொதுநிலையினர் ஆணைக்குழுவின் செயலராகவும் பணிபுரிந்து வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin