யாழ்ப்பாணம் பாசையூர் பங்கில் முன்னெடுக்கப்பட்ட அன்பிய கரோல் நிகழ்வு 16ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் தலைமையில் அன்பியங்கள் இணைந்து முன்னெடுத்த இந்நிகழ்வில் கரோல் கீதங்கங்கள் இசைக்கப்பட்டு இறைவார்த்தை பகிர்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் கலந்து ஆசியுரை வழங்கினார். அத்துடன் அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை ஜீவேந்திரா போல் அவர்கள் கலந்து கிறிஸ்து பிறப்பு விழா செய்தியை வழங்கினார்.
இந்நிகழ்வில் குருக்கள் துறவிகள் அருட்சகோதரர்கள் பங்கு மக்களென பலரும் கலந்து சிறப்பித்தனர்.

By admin