வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி ஆரம்பிக்கப்பட்டதன் 200 ஆவது ஆண்டை முன்னிட்டு கல்லூரி குழுமத்தால் பாடசாலைகளுக்கிடையே முன்னெடுக்கப்பட்ட டெனிஸ் போட்டி 11ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
இப்போட்டிகளில் 20 வயதுக்குட்பட்ட இரட்டையர் பிரிவில் யாழ். புனித பத்திரியார் கல்லூரி சேர்ந்த மாணவர்களான செல்வன் பிரியசாகான் மற்றும் செல்வன் சனோஜன் ஆகியோர் முதலாம் இடத்தையும் செல்வன் சியாம்சன் மற்றும் செல்வன் ஸ்டேபோன் ஆகியோர் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.

By admin