இலங்கை கடற்படை கட்டளைதளபதி Vice Admiral பிரியந்த பெரேரா அவர்கள் யாழ். மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் கடந்த 19ஆம் திகதி சனிக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இச்சந்திப்பு யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.

அத்துடன் இலங்கை தேசிய துடுப்பாட்ட நடவடிக்கைகளின் தலைவர் திரு. சிந்தக்க எதிரிமான்ன தலைமையிலான குழுவினர் யாழ். மறைமாவட்ட ஆயரை சந்தித்து கலந்துரையாடினர்.

யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் கடந்த 21ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்ற இச்சந்திப்பில் மண்டைதீவு பிரதேசத்தில் அமையவுள்ள தேசிய கிரிக்கெட் மைதானம், வடக்கில் கிரிக்கெட் விளையாட்டை இளையோர் மத்தியில் ஊக்குவிக்க முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

மேலும் அமெரிக்க நாட்டு தூதுவர் யூலி சங் அவர்களும் கடந்த 23ஆம் திகதி புதன்கிழமை ஆயரை சந்தித்து இலங்கையின் அரசியல் நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.

By admin