யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவனம் கரித்தாஸ் கொரியாவின் அனுசரணையில் வறிய மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கல்வி உதவித்திட்டத்தின் கீழ் ஒருதொகுதி மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கி வருகின்றது.

இச்செயற்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட க.பொ.த சாதரண தர மாணவர்களுக்கான கணித பாட கருத்தமர்வு கடந்த 19ஆம் திகதி சனிக்கிழமை யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

நிறுவன இயக்குனர் அருட்தந்தை இயூஜின் பிரான்சிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இக்கருத்தமர்வில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி கணித பாட ஆசிரியர்களான திரு. நந்திவர்மன் மற்றும் திரு. கஜுபன் ஆகியோர் கலந்து மாணவர்களை நெறிப்படுத்தினர்.

இந்நிகழ்வில் 130 மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin