உலக உணவு தினத்தை முன்னிட்டு யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவன உணவு பாதுகாப்பு செயற்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட உள்ளுர் உற்பத்திகளின் கண்காட்சியும் விற்பனை நிகழ்வும் 25ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிறுவன இயக்குநர் அருட்தந்தை இயூயின் பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் யாழ். கரித்தாஸ் கியூடெக் மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நிகழ்ச்சித்திட்ட பயனாளிகளான 25 சுயமுயற்சியாளர்கள் கலந்து தமது உற்பத்திகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்தனர்.

திருநெல்வேலி பிரதேச விவசாய பணிப்பாளர் திருமதி அஞ்சனா ஸ்ரீறங்கதாநன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் பல்சமய தலைவர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பயனாளிகளென பலரும் கலந்துகொண்டனர்.

By admin