விசேட தேவையுடைய பிள்ளைகளை சமூகத்துடன் இணைத்து அவர்களின் உள மனப்பாங்கை மேம்படுத்தும் நோக்கில் கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்ட கள அனுபவ சுற்றுலா நிகழ்வுகள் இரண்டு பிரிவுகளாக நடைபெற்றன.

நிறுவன இயக்குனர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 05 ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வில் பூநகரி, கண்டாவளை மற்றும் பரந்தன் பிரதேசங்களிலுள்ள விசேட தேவையுடைய பிள்ளைகளும் 23ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வில் புதுக்குடியிருப்பு மற்றும் ஒளிரும் வாழ்வு நிறுவனத்தை சேர்ந்த விசேட தேவையுடைய பிள்ளைகளும் இணைந்து இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா பூங்காவிற்கு கள அனுபவப்பணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்ற மகிழ்வூட்டல் நிகழ்வுகளில் பங்குபற்றினர்.

இந்நிகழ்வில் 130 வரையான விசேட தேவையுடைய பிள்ளைகளும் அவர்களின் பெற்றோர், பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களும் கலந்துகொண்டனர்.

By admin