2023ஆம் ஆண்டு நடைபெற்ற கா.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்ற மானிப்பாய் புனித அன்னாள் றோ.க.த.க பாடசாலை மாணவர்களுக்கான கௌரவிப்பு கடந்த 14ஆம் திகதி திங்கட்கிழமை அங்கு நடைபெற்றது.

பாடசாலை அதிபர் அருட்சகோதரி நீற்றா அந்தோனிப்பிள்ளை அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறப்புசித்தி பெற்ற 28 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் திருக்குடும்ப யாழ். மாகாண ஆலோசகர் அருட்சகோதரி மெற்றில்டா வசந்தி பிரான்சிஸ் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

இப்பாடசாலை 87.5 வீத சித்திபெற்று வலிகாம வலயத்தில் 2ம் நிலையில் திகழ்வதுடன், கத்தோலிக்கம், சைவநெறி, தமிழ், சங்கீதம், சித்திரம், தகவல் தொடர்பாடல் தொழினுட்பம், சுகாதாரம் ஆகிய 7 பாடங்களில் 100 வீத சித்தியையும், ஆங்கிலம், கணித பாடங்களில் 91 வீத சித்தியையும் புவியியல் பாடத்தில் 94 வீத சித்தியையும், விஞ்ஞான பாடத்தில் 88 வீத சித்தியையும், நடன பாடத்தில் 87 வீத சித்தியையும், வணிக பாடத்தில் 83 வீத சித்தியையும் பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin