டொன்பொஸ்கோ ஆங்கில பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சி பட்டறை கடந்த 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை முருங்கன் டொன் பொஸ்கோ நிறுவன வளாகத்தில் நடைபெற்றது.

பல்லவராயன்கட்டு டொன் பொஸ்கோ ஆங்கில பாடசாலை அதிபர் அருட்தந்தை மெல்வின் றோய் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கை சலேசிய உப மாகாணத்தலைவர் அருட்தந்தை ரொசான் மிராண்டா அவர்கள் கலந்துகொண்டதுடன் அனுராதபுர வலயக்கல்வி ஆங்கில பாட உதவி கல்விப்பணிப்பாளர் சேபாலி டி சில்வா அவர்கள் வளவாளராக கலந்து ஆசிரியர்களை வழிப்படுத்தினார்.

இந்நிகழ்வில் கிளிநொச்சி, நொச்சியாகமம், பல்லவராயன்கட்டு மற்றும் முருங்கன் டொன்பொஸ்கோ ஆங்கில பாடசாலை ஆசிரியர்கள் 40 பேர் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin