பருத்தித்துறை மறைக்கோட்ட அருட்பணிசபை கூட்டம் 26ஆம் திகதி கடந்த சனிக்கிழமை பருத்தித்துறை புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது.

பருத்தித்துறை மறைகோட்ட முதல்வர் அருட்தந்தை கிருபாகரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சபையின் கடந்தகால எதிர்கால திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் கலந்து யூபிலி ஆண்டு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுமங்களை அமைப்பது தொடர்பாக கருத்துரை வழங்கினார்.

இந்நிகழ்வில் பருத்தித்துறை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக இயக்குனர் அருட்தந்தை ஜெயறஞ்சன், அருட்தந்தையர்கள், அருட்பணிசபை அங்கத்தவர்கனௌ 100 வரையானவர்கள் கலந்துகொண்டனர்.

By admin