சுன்னாகம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட உறுதிப்பூசுதல் பெறவுள்ள மாணவர்களுக்கான பாசறை கடந்த 17ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை றெனால்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்கள் ஊறணி புனித அந்தோனியார் ஆலயம் மற்றும் நட்புமண் பூங்காவிற்கு கள அனுபவ பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்ற பாசறை நிகழ்வுகளில் பங்குபற்றினர்.

திரு. கரன்சன் ஜெகன் அவர்கள் வளவாளராக கலந்து கருத்துரைகள், விளையாட்டுக்கள், குழுச்செயற்பாடுகள் ஊடாக நெறிப்படுத்திய இப்பாசறையில் 50 மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin