மறைபரப்பு ஞாயிறு தினத்தை முன்னிட்டு தர்மபுரம் புனித சவேரியார் மற்றும் விசுவமடு புனித இராயப்பர் ஆலயங்களில் முன்னெடுக்கப்பட்ட சந்தை நிகழ்வுகள் 20ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

மறைபரப்பு பணிக்கு பங்களிப்போம் எனும் கருப்பொருளில் பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் பங்குமக்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.

அத்துடன் தர்மபுரம் பங்கிற்குட்பட்ட விசுவமடு புனித இராயப்பர் முன்பள்ளி மாணவர்களுக்கான ஒரு தொகுதி தளபாடங்கள் வழங்கும் நிகழ்வும் அன்றைய தினம் அங்கு நடைபெற்றது.

தளபாடங்களிற்கான நிதியுதவியை திரு. திருமதி தெய்வேந்திரன் சாந்தி தம்பதியினர் வழங்கியிருந்ததுடன் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி உப அதிபர் அருட்தந்தை றேனால்ட் செறில்னஸ் சுமன் அவர்கள் கலந்து இந்நிகழ்வை சிறப்பித்தார்.

By admin